Friday 19 September 2014

மதயானைக்கூட்டம்

களவர் - கள்வர - கள்வர்கள் - களேபர(ம்)ர்கள்   - கலியரசர்கள் 



நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவ ராதலோ அரிதே முனாஅது - அகம்:61


வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங் கோட்டு
டோங்குவெள்ளருவி வேங்கடத்தும்பர் - அகம்.213

வினை நவில் யானை விறல் போர் தொண்டையர் - போர்த்தொழில் பயின்ற யானைகளையுடைய வலிய போர் வல்ல தொண்டையர்.

களிறுஅடக்கும் கூட்டம்
திருவேங்கட மலையாண்ட கள்வர் கூட்டம்
யானைகளின் நிரை கவரும் கூட்டம்
களேபரக்கூட்டம்
களபச்சின்னம் கொண்டக்கூட்டம்
தொண்டையராய் வாழ்ந்தக்கூட்டம்
களிறு அடக்கி போர் பயிற்ச்சி அளிக்கும் கூட்டம்
ஆநிரை கவரும் கூட்டம்
ஆறலைக்கள்வர் கூட்டம்
மானமறவர்க்கூட்டம்
மழவர்(இளமையான மறவர்)க்கூட்டம்.






கரி(யின்)காலர்கள்...

                                  

Tuesday 16 September 2014

தொறு பூசல் - பூசல் மறவர்கள்



இலக்கியங்களில் நிரைகோடல்


இச் சுரம் படர் தந்தாளே, ஆயிடை
அத்தக் கள்வர் ஆ தொழு அருத்தென
பிற்படு பூசலின் வழி வழி ஓடி  - அகம்:7

நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவ ராதலோ அரிதே முனாஅது - அகம்:61


கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து,
மன்று நிறை பைதல் கூர, பல உடன்
கறவை தந்த கடுங் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை

மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
''வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
சேக் கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள்கொல்?'' எனக் கலுழும் என் நெஞ்சே..- அகம்:63


இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
பசி என அறியாப் பணை பயில் இருக்கை - அகம்:91


வெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதை
மண்கொள் புற்றத் தருப்புழை திறப்பின்
ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அருங்குறும் பெறிந்த ஆற்றலொடு பருந்துபடப்
பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கை

கெடாஅ நல்லிசைத் தென்னன் தொடாஅ
நீரிழி மருங்கிற் கல்லளைக் கரந்தவவ்
வரையர மகளிரின் அரியள்
அவ்வரி அல்குல் அணையாக் காலே. - அகம்:342

பொன்னா குதலும் உண்டெனக் கொன்னே
தடிந்துடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறனில் சிதாஅர் வறுமை நோக்கிச்
செங்கோல் அம்பினா கைந்நொடியாய்ப் பெயரக் - அகம்:347

Monday 8 September 2014

கொற்றவை வழிபாடு

    

 கொற்றவை

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் 
- (சிலப்பதி. காடுகாண். 64-66)